"மதம்" பிடித்த மிருகம்
இறைவனின் பேரில் புரிந்தோமே பல யுத்தம்..
ஒடுக்கப்படோர்க்கு கொடுமைகள் இழைத்தோமே நித்தம்..
கேட்கிறதா வலிக்கும் அவர் மனதின் சத்தம்?
போதுமடா இந்த மண் மேல் சிந்திய இரத்தம்..
மத வெறியை மக்கள் மனதிலே விதைத்தோம்..
சிறுபான்மையினரை சினம் கொண்டு வதைத்தோம்..
மதசார்பின்மை என்ற சொல்லையே சிதைத்தோம்...
மனித நேயத்தை மண்ணோடு மண்ணாய் புதைத்தோம்..
என் மதமே பெரிதென கூறிடும் சிறுமை..
ஏனிந்த வீணான வெட்டிப் பெருமை?
உனையே உயர்வாய் கூற ஏது உனக்கு உரிமை?
இச்சிந்தை காட்டுவது நம் சிரத்தின் வெறுமை..
"மதம்" கொண்ட மிருகமாய் மாறிடாது தடுத்திடு..
மனிதரை மனிதரே அழிப்பதை நிறுத்திடு..
மற்றவரின் நம்பிக்கைகளை மதித்திடு..
மண் மேல் அனைவரும் சமமென நினைத்திடு..
No comments:
Post a Comment