வெந்து போயின இவன் பிஞ்சு விரல்கள்..
வாடிய முகத்துடன் ஒரு தொழிலாளி..
ஓடி விளையாட வேண்டிய வயதில்..
கடமையை இச்சிறுவயதில் சுமத்தும்,
மடமையை என்னென்று கூற?
பட்டாசு வெடிக்க துயில் கொள்ள வேண்டியவன்,
பட்டாசு ஆலையில் துயில் கொள்கிறான்.
அவ்வப்பாவிச் சிறுவன் மீது சில்லறைகள் வீசப்படும்..
வேலையில் தவறென்று நொடிபொழுதும் ஏசப்படும்..
மிட்டாய் சுவை இனிப்பென்று தெரிந்த நமக்கு, அதை
விற்பவனுக்கு அது கசப்பென்று ஏன் தெரியவில்லை?
குழந்தையை தொழிலாளி ஆக்கும் இந்த பொம்மலாட்டம்..
நாம் அனைவரும் கை கொட்டி பார்க்கும் களியாட்டம்..
No comments:
Post a Comment