பகலை இரவாக்கிட்ட மது
இரவை பகலாக்கிட்ட மாது
பொழுதை களவாடிய சூது
வெறிச்சோடிய வீட்டின் வாசலிலே..
வெயில் தாக்கும் சுண்ணாம்பு பூசலிலே..
அவள் கண்ட கனவெல்லாம் ஊசலிலே..
உட்காந்திருந்தா ஒருத்தி கையில் பிள்ளையோட..
தலையில் பல நாள் வாடி போன முல்லையோட..
கும்பிட்ட தெய்வமேதும் கைகொடுக்கவில்லை..
நம்பிட்ட உறவு ஏதும் செவி சாய்க்கவில்லை..
அழுது அழுது வறண்டு போன அவள் கண்கள்..
இன்றைக்கும் பல குடிசைகளில் ஒளி இழந்த விண்மீன்கள்..
பழித்திட நீயொன்றும் கோழையல்ல..
No comments:
Post a Comment