Wednesday, 24 September 2014

கலங்காதே பெண்ணே

கலங்காதே பெண்ணே

பகலை இரவாக்கிட்ட மது
இரவை பகலாக்கிட்ட மாது
பொழுதை களவாடிய சூது

வெறிச்சோடிய வீட்டின் வாசலிலே..
வெயில் தாக்கும் சுண்ணாம்பு பூசலிலே..
அவள் கண்ட கனவெல்லாம் ஊசலிலே..

உட்காந்திருந்தா ஒருத்தி கையில் பிள்ளையோட..
தலையில் பல நாள் வாடி போன முல்லையோட..

கும்பிட்ட தெய்வமேதும் கைகொடுக்கவில்லை..
நம்பிட்ட உறவு ஏதும் செவி சாய்க்கவில்லை..

அழுது அழுது வறண்டு போன அவள் கண்கள்..
இன்றைக்கும் பல குடிசைகளில் ஒளி இழந்த விண்மீன்கள்..

பழித்திட நீயொன்றும் கோழையல்ல..
விழித்திடு பெண்ணே விழித்திடு..
அவனுடைய முகத்திரையை
கிழித்திடு பெண்ணே கிழித்திடு..

ஒரு பெண்ணால் ஆகாத காரியம்
அந்த இறையாலும் ஆகாது..
நீ அடி வைக்காவிட்டால்
இந்நிலை என்றும் மாறாது..

No comments:

Post a Comment