உழைப்பவனின் உதிரம்..
உள்ளங்கை சிவக்க உழைத்திடும் தோழர்க்கு- முடிவில்
உதிரம், வலி,கண்ணீர் மட்டுமே மிஞ்சுவது..
ஊணை உருக்கி உழப்பது நம் தொழிலாளி-அவரை
வாட்டி வதைக்கிறார் நம் "வள்ளல்" முதலாளி..
மறுத்திடுவாயோ உன் இலாபத்தை பகிர்ந்திட?
அறுப்பது நீயோ வேறொருவன் விதைத்திட?
கொடுப்பது உனதோ 'கொடை' போலே எண்ணிட?
தடுப்பது முறையோ அவர் வாய்ப்பை, வளர்ந்திட?
பகட்டாய் வாழவே அனுதினமும் அலைகிறோம்.
திகட்டும்போதும் செல்வம் சேர்த்திடவே முனைகிறோம்.
"வலியவன் வெல்வான்" என வாய்ப்புகளை பறிக்கிறோம்.
வலிமையை வளர்த்திட வாய்ப்பு எங்கே அளிக்கிறோம்?
உழைப்பாளர் யாவரும் ஒன்று கூடுவோம்- தோழா!
உரிமையாய் நமதென்பதை எடுத்துக் கொள்ளுவோம்!
உலகம் சுழல்வது உழைக்கும் மக்களால்- அது
ஆளப்ப்பட வேண்டும் அவர்கள் கைகளால்!
No comments:
Post a Comment