இல்லாமல் போன இல்லாதவர்கள்
பாதை மறந்தவன்
போதையுடன் படும் பாட்டு இது...
பாதி உயிருடன்
சேதி சொல்ல வந்தவன் கூற்று இது..
கல் சுமந்து மண் சுமந்து..
படி ஏறி படி இறங்கி..
தனக்கு ஒவ்வாமை என தெரிந்தும்..
கண்ணிமை மூட நேரமில்லா வேலை கொண்டான்..
மாடாய் உழைத்தான்..
ஓடாய் தேய்ந்தான்..
கட்டிடம் சாய்ந்ததோடு..
தானும் சாய்ந்தான்..
தரம் தாழ்ந்த அவன் முதலாளியை பார்த்து
தரம் தாழ்ந்த அவன் முதலாளியை பார்த்து
கரம் உயர்த்தி கேள்வி கேட்க கரம் இல்லை ஒருவனுக்கு..
கொடுக்கப்பட வேண்டிய இருபது லட்சம் சம்பளம்..
உள்ளே புதைந்துள்ளதென்ற செய்தி அம்பலம்..
அங்கே புதைந்தது ஒருவனின் மனித நேயமும்..
போரூரில் நடந்த இத்துயரம்..
எத்துனை ஆருயிரை கொண்டு போன உயரம்..
என்றும் சொல்லி மாளாது..
குற்றவாளியின் அன்மா நீடு வாழாது..
No comments:
Post a Comment