Friday, 6 June 2014

காதல் க(வி)தை




காதல் க(வி)தை



தேடல்:

என் பாவையின் துணையுடன் வாழ்வேனோ?- இல்லை 
அவளை பார்திடாமலே மாய்வேனோ?

காணல்:

உன் விழியிரண்டின் பேரழகை வியந்து கண்ட நொடி,
விலகாது என் நெஞ்சில் பதிந்து கொண்டதடி.

நினைத்து ஏங்குதல்:

உன் புன்னகையில் நெஞ்சை புதைக்கின்றாய்.
புன்சிரிப்பால் ஏனடி வதைக்கின்றாய். 

காதல்:

வாழும் நொடி பொழுது யாவும்
உன் துணை அதிருந்தாலே போதும்!
கூறாயோ இது காதல் என்று..?
வாராயோ என் கையில் இன்று...?

வர்ணித்தல்:

உன் அழகினிலே கொஞ்சம், அடைய இயற்கை தாயும் கெஞ்சும். 
அதை கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.

சிரித்தல்:

உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்

முத்தம்:

உன் இதழ்கள் மிதக்கும் செம்முகிலினமா? அதன்
முத்த மழை என் மேல் பொழிந்திடுமா?

செல்ல மோதல்:

ஏசிடு பெண்ணே உன் கோபம் தீர- அனால் 
பேசிடு பின்னே என் நெஞ்சம் ஆற.
தேரி விடும் உள்ளம் நீ திட்டி விட்டாலும்- அனால் 
ஆறிடுமோ மனதில் உன் மௌனத்தின் காயம்? 

பிரிவில் ஏங்குதல்:

உன் பூமுகம் காட்டிட மாட்டாயோ? அழகில் 
சொக்கி மயங்கும் வரம் ஈட்டாயோ?

வாழ்தல்:

என் மார்பில் நீ என்றும் சாய.. உன் அன்பிலே நானும் தோய..
இந்நெருக்கம் காணாது மாய்வு.. நம் காதல் அலைக்கேது ஓய்வு..

நீங்குதல்:

என்னோடு இருப்பாய் எங்கும் போகாது.
அருகில் நீ வேண்டும் என்றும் நீங்காது.
என் உடல் நோகும் உன்னை அணைக்காது.
உன்னை காணாமல் என் உயிர் பிழைக்காது.

விரிசல்:

என் கை உன் கைகளை பிடித்திடுமோ? இல்லை  
என் கண்களின் கண்ணீரை துடைத்திடுமோ?

விலகல்:

நெஞ்சில் நீங்காத ஓர் பாரம்- தந்து 
விலகி போவாயோ தூரம்?
நீ விட்டுச் செல்லும் அந்த நேரம்.
கண்ணில் வடியும் நீரல்ல உதிரம்.

பிரிதல்:

உன் பாதச் சுவடுகள் மறையும் வழியே
என் காதல் நினைவுகள் தொலைந்திட நின்றேன்.

No comments:

Post a Comment