காதல் க(வி)தை
தேடல்:
என் பாவையின் துணையுடன் வாழ்வேனோ?- இல்லை
அவளை பார்திடாமலே மாய்வேனோ?
காணல்:
உன் விழியிரண்டின் பேரழகை வியந்து கண்ட நொடி,
விலகாது என் நெஞ்சில் பதிந்து கொண்டதடி.
நினைத்து ஏங்குதல்:
உன் புன்னகையில் நெஞ்சை புதைக்கின்றாய்.
புன்சிரிப்பால் ஏனடி வதைக்கின்றாய்.
காதல்:
வாழும் நொடி பொழுது யாவும்
உன் துணை அதிருந்தாலே போதும்!
கூறாயோ இது காதல் என்று..?
வாராயோ என் கையில் இன்று...?
வர்ணித்தல்:
உன் அழகினிலே கொஞ்சம், அடைய இயற்கை தாயும் கெஞ்சும்.
அதை கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.
சிரித்தல்:
உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்
முத்தம்:
உன் இதழ்கள் மிதக்கும் செம்முகிலினமா? அதன்
முத்த மழை என் மேல் பொழிந்திடுமா?
செல்ல மோதல்:
ஏசிடு பெண்ணே உன் கோபம் தீர- அனால்
பேசிடு பின்னே என் நெஞ்சம் ஆற.
தேரி விடும் உள்ளம் நீ திட்டி விட்டாலும்- அனால்
ஆறிடுமோ மனதில் உன் மௌனத்தின் காயம்?
பிரிவில் ஏங்குதல்:
உன் பூமுகம் காட்டிட மாட்டாயோ? அழகில்
சொக்கி மயங்கும் வரம் ஈட்டாயோ?
வாழ்தல்:
என் மார்பில் நீ என்றும் சாய.. உன் அன்பிலே நானும் தோய..
இந்நெருக்கம் காணாது மாய்வு.. நம் காதல் அலைக்கேது ஓய்வு..
நீங்குதல்:
என்னோடு இருப்பாய் எங்கும் போகாது.
அருகில் நீ வேண்டும் என்றும் நீங்காது.
என் உடல் நோகும் உன்னை அணைக்காது.
உன்னை காணாமல் என் உயிர் பிழைக்காது.
விரிசல்:
என் கை உன் கைகளை பிடித்திடுமோ? இல்லை
என் கண்களின் கண்ணீரை துடைத்திடுமோ?
விலகல்:
நெஞ்சில் நீங்காத ஓர் பாரம்- தந்து
விலகி போவாயோ தூரம்?
நீ விட்டுச் செல்லும் அந்த நேரம்.
கண்ணில் வடியும் நீரல்ல உதிரம்.
பிரிதல்:
உன் பாதச் சுவடுகள் மறையும் வழியே
என் காதல் நினைவுகள் தொலைந்திட நின்றேன்.
No comments:
Post a Comment