தளராதே தளிரே!!!
விழி பிதுங்கி நின்று நீயும்
கலி என்று குறை கூறி
பழி பல ஏற்று நின்று
வழி தவறி சென்றதேனோ ?
வேலை தேடி அலைந்த நீயும்
கிளை தாண்டும் குரங்காக
வேளை உணவு கிடைக்காமல்
சிலை போல் அசைவிழந்ததேனோ ?
பயிற்சி பல மேற்கொண்டு
அயர்ச்சி அடையாத நீ
முயற்சி சிலவே மேற்கொண்டு
தளர்ச்சி அடைந்ததேனோ ?
ஞாலம் அது சுற்றுவதைக் கண்டு
காலம் அது மாறுமென நம்பு
பாலம் ஒன்று வானிற்குக் கட்டி
No comments:
Post a Comment