Monday, 29 December 2014

தளராதே தளிரே !!!



தளராதே தளிரே!!!


விழி பிதுங்கி நின்று நீயும் 
கலி என்று குறை கூறி 
பழி பல ஏற்று நின்று 
வழி தவறி சென்றதேனோ ?

வேலை தேடி அலைந்த நீயும் 
கிளை தாண்டும் குரங்காக 
வேளை உணவு கிடைக்காமல் 
சிலை போல் அசைவிழந்ததேனோ ?

பயிற்சி பல மேற்கொண்டு 
அயர்ச்சி அடையாத நீ 
முயற்சி சிலவே மேற்கொண்டு 
தளர்ச்சி அடைந்ததேனோ ?

ஞாலம் அது சுற்றுவதைக் கண்டு 
காலம் அது மாறுமென நம்பு 
பாலம் ஒன்று வானிற்குக் கட்டி 
வர்ணஜாலம் பல அமைத்திடு - வெற்றிக்கொடி நாட்டி !

No comments:

Post a Comment