Monday, 29 December 2014

மை தீர்ந்த பேனா .....


மை தீர்ந்த பேனா ....


பொய் தீர்ந்து போன என்னால்
காதல் கவிதை தீட்ட முடியாமல் போக

மெய் தீரவில்லை....படைத்திடுவாய் 
புதுக்கவிதை ஒன்று நீயாக - என

கை பிடித்து உணர வைத்த 
எனது மன சாட்சிக்காக

வாய் சொல்லும் இக்கவிதையைப் 
படித்திடுவாயோ என் வாசகனாக

காய் பழுத்து பழமாகும் 
வரை காத்திராதே...

வேர் விடும்போதே  உன் 
வியர்வை சிந்தத் தொடங்கட்டும்

அதுவே போர்க்களத்தில் உன் உதிரம் 
சிந்தவிடாமல் பிடித்துக் கொள்ளும் பாத்திரம்

மை தீர்ந்து போவது - நீ
உன் சிந்தனையை சிறை பிடிக்க அல்ல

அதுவே நீ ஓடப்போகும் தூரத்தை 
கணிப்பதர்க்கான அளவுகோல் !!

No comments:

Post a Comment