Kavidhai For You
"உங்கள் கற்பனை மட்டும் போதும்.. வா! பல கவி படைப்போம் நாமும்" --The கவிதை REVOLUTION
About Me
Unknown
View my complete profile
Sunday, 28 September 2014
அவளே என் பரிசு!
அவளே என் பரிசு!
கொட்டும் பறை, ஆட்டம், கோலாகல கூட்டம்..
கொஞ்சு தமிழ் கானம், குதுகல கொண்டாட்டம்..-இவை
ஏதும் இன்றி களிப்புற்ற என் நெஞ்சு- அது
ஏனென்றால் என் தேவதையை நான் சேரும் தினம் இன்று..
பிறந்த நாள் இன்றோ நான் என்றோ தோன்றியதாலே? நான்
பிறந்ததே இக்கணம் தானோ உன்னை கண்டதாலே? ஒரு
குழந்தையை மாறி உன் கையில் சேர ஆவலே! என்னை
கொஞ்சி விளையாடி நீ முத்தமிட ஆசையே!
முக்கனியுடன் தேனும் சேர் கூட்டு அதன் அருமை..
முத்தமிழும் செப்பும் என் தாய்மொழியின் இனிமை.. எதும்
பூமகள் உன் பேச்சுக்கு ஈடில்லை.. பெண்மானே! நான்
பூவுலகில் உதிததேல்லாம் அதை கேட்டு இரசிக்கத்தானே!
மெத்தை மேல் விழுகிற ஓர் சிறகினைப் போலே.. அவள்
மெல்லிய உதட்டின் மேல் என் வாய் பதிந்துவிட்டாலே..
பண்டம் பலகாரம் யாதையும் நாவும் வெறுக்கும்! என்னை
பற்றிய செவ்விதழின் சுவை எப்படியா மறக்கும்?!
இராஜ இராஜனின் வாளும்.. இளங்கோவின் பெரும் காவியம்..
குமரிக்கடல் முத்தும்.. தஞ்சையின் அழகு ஓவியம்.. இவை
எல்லாம் பெற்றதால் நான் இன்பக் கடலில்.. அத்திளைப்பு
என்னவளின் வருகையால் கிட்டியது ஒரு நொடியில்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment