தேவதையின் முதல் பார்வை
இளவேனிற் காலம், விடியற் காலை நேரம்..
காற்றை துணை கொண்ட நடை சாலை ஓரம்..
குடிலொன்றின் வாசலில் அக்கன்னியைக் கண்டேன்.
கதிரவன் உதித்திட நான் உரைந்து நின்றேன்..
முகில் கிழிக்கும் எல்லொளி கண் கூச..
முடித்திரை நீங்கி உன் பார்வை என் மேல் வீச..முகில் கிழிக்கும் எல்லொளி கண் கூச..
அதிகாலை நிலா விரைந்து மறையக் கண்டேன்..
அம்மதியைத் தாண்டிய நாணம் நான் கொண்டேன்..
காவியங்கள் உன் மீது படைக்கச் செய்வாயோ? அதை
காவியங்கள் உன் மீது படைக்கச் செய்வாயோ? அதை
பாட எண்ணிட, பார்வையால் சுவாசம் கொய்வாயோ?
குயிலை அழைத்தேன் உன் மேல் கானம் இயற்ற..
அது கூறியதா என் காதல் கூற்றை?
இறை நூறும் அளிக்கும் அருட்காட்சி..
மறை நான்கும் செப்பும் மனதின் இறையாட்சி.. யாவும்
கண்டேன் அக்கள்ளியின் கயல் விழியில்.. பல
காலத் தவ மோட்சம் கிட்டியது நொடியில்..
களிப்புற்று விண்ணில் உலாவும் புள்ளினம்.. அவள்
கண்டதும் அவையோடு சேர்ந்து பறந்ததே என் மனம்..
நெகிழும் தேன்மலரை சேரும் வண்டின் தாகம்- அது போலே
என் நெஞ்சம் அவள் மேல் கொண்ட பெரும் மோகம்..விழியிருந்து பாய்வது காதல் வாளோ? அதை
வீசி என் நெஞ்சை சிறை எடுத்தாளோ?
பதுமை, இவளென் தேவதையாய் ஆகிடனும்.. மேனி
பதுமை, இவளென் தேவதையாய் ஆகிடனும்.. மேனி
வருடுவது காற்றல்ல அவள் விரல்களாய் மாறிடனும்..
எழில் தீயே என்றாயினும் உனை நெருங்கிடுவேனோ?
என்றும் அதில் குளிர் காயும் வரம் பெறுவேனோ?
முனையாது உன்னழகில் வாய் பிளந்திடுமோ? அதை
மூடிட உன் செவ்விதழ்கள் முன் வந்திடுமோ?முனையாது உன்னழகில் வாய் பிளந்திடுமோ? அதை