பேசிடாத வார்த்தைகள்..
ஜெயங்கொண்டான் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
கீழே விழுந்தவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..
மருத்துவன் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
மரணப்படுக்கையில் இருப்பவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..
கேள்வி கேட்ட ஆசிரியை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பதிலறியா மாணவன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..
வழக்கறிஞன் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
நீதிபதி பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..
தந்தை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
மகன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..
அர்ச்சகர் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பக்தன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..
காலங்கலமாக தொடரும் ஒரு அரசியல் இது..
இடம் மாறி நிற்கும் மானுடனின் நிலை இது..
காலம் மாற மாற..
ஞாலத்தின் இந்நிலையும் மாறும் என நம்புவோம்..