Sunday, 28 September 2014

அவளே என் பரிசு!

அவளே என் பரிசு!

கொட்டும் பறை, ஆட்டம், கோலாகல கூட்டம்..
கொஞ்சு தமிழ் கானம், குதுகல கொண்டாட்டம்..-இவை
ஏதும் இன்றி களிப்புற்ற என் நெஞ்சு- அது
ஏனென்றால் என் தேவதையை நான் சேரும் தினம் இன்று..

பிறந்த நாள் இன்றோ நான் என்றோ தோன்றியதாலே? நான்
பிறந்ததே இக்கணம் தானோ உன்னை கண்டதாலே? ஒரு
குழந்தையை மாறி உன் கையில் சேர ஆவலே! என்னை
கொஞ்சி விளையாடி நீ முத்தமிட ஆசையே!

முக்கனியுடன் தேனும் சேர் கூட்டு அதன் அருமை..
முத்தமிழும் செப்பும் என் தாய்மொழியின் இனிமை.. எதும்
பூமகள் உன் பேச்சுக்கு ஈடில்லை.. பெண்மானே! நான்
பூவுலகில் உதிததேல்லாம் அதை கேட்டு இரசிக்கத்தானே!

மெத்தை மேல் விழுகிற ஓர் சிறகினைப் போலே.. அவள்
மெல்லிய உதட்டின் மேல் என் வாய் பதிந்துவிட்டாலே..
பண்டம் பலகாரம் யாதையும் நாவும் வெறுக்கும்! என்னை
பற்றிய செவ்விதழின் சுவை எப்படியா மறக்கும்?!

இராஜ இராஜனின் வாளும்.. இளங்கோவின் பெரும் காவியம்..
குமரிக்கடல் முத்தும்.. தஞ்சையின் அழகு ஓவியம்.. இவை
எல்லாம் பெற்றதால் நான் இன்பக் கடலில்.. அத்திளைப்பு
என்னவளின் வருகையால் கிட்டியது ஒரு நொடியில்..

Wednesday, 24 September 2014

கலங்காதே பெண்ணே

கலங்காதே பெண்ணே

பகலை இரவாக்கிட்ட மது
இரவை பகலாக்கிட்ட மாது
பொழுதை களவாடிய சூது

வெறிச்சோடிய வீட்டின் வாசலிலே..
வெயில் தாக்கும் சுண்ணாம்பு பூசலிலே..
அவள் கண்ட கனவெல்லாம் ஊசலிலே..

உட்காந்திருந்தா ஒருத்தி கையில் பிள்ளையோட..
தலையில் பல நாள் வாடி போன முல்லையோட..

கும்பிட்ட தெய்வமேதும் கைகொடுக்கவில்லை..
நம்பிட்ட உறவு ஏதும் செவி சாய்க்கவில்லை..

அழுது அழுது வறண்டு போன அவள் கண்கள்..
இன்றைக்கும் பல குடிசைகளில் ஒளி இழந்த விண்மீன்கள்..

பழித்திட நீயொன்றும் கோழையல்ல..
விழித்திடு பெண்ணே விழித்திடு..
அவனுடைய முகத்திரையை
கிழித்திடு பெண்ணே கிழித்திடு..

ஒரு பெண்ணால் ஆகாத காரியம்
அந்த இறையாலும் ஆகாது..
நீ அடி வைக்காவிட்டால்
இந்நிலை என்றும் மாறாது..

Thursday, 11 September 2014

பேசிடாத வார்த்தைகள்..

 

பேசிடாத வார்த்தைகள்..

ஜெயங்கொண்டான் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
கீழே விழுந்தவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..

மருத்துவன் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
மரணப்படுக்கையில் இருப்பவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..

கேள்வி கேட்ட ஆசிரியை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பதிலறியா மாணவன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

வழக்கறிஞன் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
நீதிபதி பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

தந்தை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
மகன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

அர்ச்சகர் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பக்தன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

காலங்கலமாக தொடரும் ஒரு அரசியல் இது..
இடம் மாறி நிற்கும் மானுடனின் நிலை இது..

காலம் மாற மாற..
ஞாலத்தின் இந்நிலையும் மாறும் என நம்புவோம்..