Wednesday, 27 August 2014

நாணயம்

நாணயம்

மனிதனை இணைப்பது நாணயம்..
     மக்களை வளைப்பது நாணயம் ..
கட்டில் தோன்றிய நாணயம்..
     கடவுள் ஆயிட்ட நாணயம்..

மன்னர்கள் முகம் பதித்த நாணயம்..
     நாட்டின் சின்னம் பதித்த நாணயம்..
பற்பல உலோகமாலான நாணயம்..
     இல்லாரை உலோகமாக்கும் நாணயம்..

கலைகள் படைத்த நாணம்..
     மலையிலும் தேடப்படும் நாணயம்..
வாழ்வு முழுவதுமே நாணயம்..
    வாழ்கையை முடிப்பதே நாணயம்..

Friday, 15 August 2014

தொழிலாலியா? முதலாளியா?

தொழிலாலியா? முதலாளியா?


மன்னரைப்போல் வாழ்ந்திடவே அங்கும் இங்கும் ஓடுவார்..
     பணத்திற்கு நிம்மதியை விலையாகப் பேசுவார்...
புறத்தினிலே சிரிதிருந்தி அகத்தினிலே அலறுவார்..
     புரியாத புதிர்தானே முதலாளிக் கூட்டமே!

ஒருவேளை உணவிற்கே நாள் முழுதும் உழைத்தாலும்
     அவ்வுனவை அமிர்தமென எண்ணியே உண்ணுவார்..
சோர்ந்தாலும் மனதினிலே அமைதி கொண்டு தூங்குவார்..
     சுதந்திரக் காற்றடா தொழிலாளர் வர்க்கமே!

உடலாலே உழைக்காமல் மனக்கசப்பை கொண்டிருத்தல்..
     இது போன்ற நிழல் வாழ்வே நல்வாழ்வா? கூறடா..
நிம்மதியை வாழ்ந்து வரும் தொழிலாளர் வாழ்க்கையே
     கடலைவிட சிறந்ததென நீ முழங்கிக் கூறடா!!