Sunday, 30 November 2014

சீயான்..


சீயான்..


தமிழ் சினிமாவுக்கு சாதுவாய் வந்த 'சேது' நீ..
உலக அழகி ஐஸ்வர்யா 'ராயை'யே 
தூக்கிச் சென்ற எங்கள் 'சமுராய்' நீ..
ஆசாமியாய் 'சாமி'யில் நடித்து..
சாமியாய் 'கந்தசாமி'யில் நடித்த 'அந்நியன்' நீ..
தமிழ் சினிமாவில் உன் பயணம் ஒரு 'இராஜபாட்டை'..
என்றும் நாங்கள் பாடுவோம் இந்த 'பிதாமகனின்' பாட்டை..
உன்னுடைய 'தில்' ஒன்றே..
நீ என்றும் 'தூள்' கிளப்பக் காரணம்..
'பீம' பலமாய் உம ரசிகர்கள் யாம் இருக்க..
என்றைக்கும் எங்களை ஆளும் 'கிங்' நீ..  

Wednesday, 19 November 2014

தொலைவில் நிற்கும் காதல்


தொலைவில் நிற்கும் காதல்


கடல் தாண்டி வரும் 
இந்த மடல்..
நீ உடல் நலமா என அறிந்திடவே..
மதில் மேல் நிற்கும் பூனையாய். இங்கு உன் 
பதில் மேல் எதிர்பார்த்திருக்கிறேன்..
உன் செல்ல இம்சைகள் இல்லா இரவுகள் 
இங்கு இருண்ட அமாவசையாய் நகர்கின்றன.
நீயின்றி இங்கு காற்று கூட குளிர்ந்திட,
வேற்று கிரகமாய் மாறுகிறது என் உலகம்.
தீபம் ஏற்றும் வேளையிலே,
கோபம் ஏற்று சென்ற தேனே..
அங்கு நீ வானவில் கண்டிட,
இங்கு நான் வருணனை வருடினேன்..
எம் புலனை அடக்க நீயின்றி இங்கு..
இக்கவிதைக்குள் 
ஐம் புலனை அடக்க நான் இங்கு தவிக்கிறேன்.